திருவாரூர்
பிப்ரவரி 21
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக சென்னை தலைமை செயலகத்திலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு தளத்தினையும் திறந்து வைத்தார்கள்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், பழையவலம் கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், மன்னார்குடி வட்டம், மேலவாசல் கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், மன்னார்குடி வட்டம், ஆலத்தூர் கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், திருத்துறைப்பூண்டி வட்டம், கற்பகநாதர்குளம் கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், திருத்துறைப்பூண்டி வட்டம், 62.தோலி கிராமத்தில், ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளிட்ட 5 புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் ரூ.20.90 கோடி மதிப்பீட்டில் 33000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு தளத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்தில் பயிரிடும் நெல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் கொள்முதல் செய்து வைக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் திறந்த வெளி சேமிப்பு மையத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லை வைக்கின்றனர்.
மழை, வெயிலில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுகின்றன. மழை காலத்தில் மூட்டையில் இருக்கும் நெல் முளைத்து பயனின்றி போகிறது. இதை தவிர்க்க திறந்தவெளி சேமிப்பு மையங்களில் கட்டாயம் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைப்பது அவசியம் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. அதன்பொருட்டு அரசு நெல்லை பாதுகாக்க மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளம் கட்ட 27.02.2004 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
ரூ.20.90 கோடி மதிப்பீட்டில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் (11 ழேள ஓ 3000 மெ.டன்) 33000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்புதளம் பணிகள் நிறைவு பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டதனை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி, செயற்பொறியாளர் குணசீலன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.