தஞ்சாவூர் செப்.10.
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம் மாதாந்திர சொற்பொழிவு நடைபெற்றது.
நிகழ்ச்சி தஞ்சாவூர் தெற்கு வீதி ஜவுளிசெட்டி தெரு விநாயகர் கோவில் வளாகத்தில் தமிழ் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை இணை பேராசிரியர் மற்றும் தலைவர் துளசேந்திரன் தலைமை வகித்தார்.
பழந்தமிழர் ஓவியங்களில் இசையும் நாட்டியமும் என்ற தலைப்பில் தமிழிசை ஆய்வாளர் முனைவர் தினேஷ்குமார் ஒலி – ஒளி காட்சியுடன் சிறப்புரையாற் றினார்.
முன்னதாக சுவடியில் மாணவி அமுதா கருப்பசாமி அனைவரை யும் வரவேற்றார் .நிறைவாக சுவடியியல் மாணவி கவுசல்யா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியின் தொகுப்புரையாக பொறியாளர் மாணவி கவிஞர் கண்மணி செய்திருந்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏடகம் நிறுவனர் முனைவர் மணிமாறன் சிறப்பாக செய்திருந்தார்.