சென்னை, அக்- 11, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அமைச்சு பணியாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக புதிய கல்வி கொள்கையான பி.எம் கல்வி திட்டத்தை ஏற்றால் தான் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ-2105 கோடியை வழங்குவோம் என்று தமிழ்நாடு ஆசிரியர்களையும், அமைச்சுப் பணியாளர்களையும் மாணவர்களையும் வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பிடிவாதப்போக்கை கண்டித்து தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க விலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் தமிழ்நாடு தலைமைச்செயலகச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளருமான தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தலைவர் நாடாளமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன்,
தமிழ்நாடுமார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளார் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளார் இரா.முத்தரசன், சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, மற்றும் தமிழ்நாடு தலைமைச்செயலக அமைச்சு பணியாளர் சங்க தலைவர் கு. வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.