சென்னை, டிச- 21, சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் வெறுப்பு பேச்சை கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சியின் வடக்கு மண்டலம் சார்பில் சென்னை எழும்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேரறிவாளன் தலைமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் வேலு, அரசு ஊழியர் அணி மாநில செயலாளர் பலராமன் , மாநில துணைச் செய்தி தொடர்பாளர் வள்ளல் பாரி , மாநில இளம் புலிகள் அணி துணை செயலாளர் விஜயகுமார் , வடக்கு மண்டல செயலாளர் புலி பழனி மற்றும் சென்னை மாவட்ட செயல் வீரர்கள் தேவேந்திரன் வள்ளிமுத்து, மணிகண்டன், மணிவண்ணன், தகடூர் அண்ணாமலை, தகடூர் பூவரசன், திருச்சி ராஜா, விழுப்புரம் வெங்கடேசன், ஊடகப்பிரிவு வெங்கடேசன் தகடூர் இளைய அரசு மற்றும் மகளிரணி உள்ளிட்ட பலர் இந்த இரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்ப் புலிகள் இரயில் மறியல் போராட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics