கருங்கல் ஏப் 1
கருங்கல் தமிழ் சங்கம் சார்பில் பணி நிறைவு ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில்
தொழில் அதிபர் எஃப். எம். செல்வராஜ் முன்னிலை வகித்தார். தமிழ் சங்க நிறுவனர் கப்பியறை வ. ராயப்பன் வரவேற்றார். முனைவர் கமல. செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் அஜித் சிங் ஜாண், ஜெயக்குமாரிக்கு புலவர் சத்யநேசன், ஆசிரியை சாந்தி, ஆன்சி சோபா ராணி, பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆசிரியர் பயஸ் நன்றி கூறினார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சிசில் தொகுத்து வழங்கினார்.