விழுப்புரம், ஏப்ரல் 22
விழுப்புரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மனிதாபிமான முயற்சியாக வெயில் காலத்தில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்ட நீர் மற்றும் மோர் பந்தல், தீயநபர்களால் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மனிதாபிமானமற்ற செயலை தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக கண்டிக்கிறது எனவும், இதுபோன்ற செயல்கள் சமூகத்திற்கே எதிரானவையாகும் எனவும் அந்தக் கழகத்தின் நிர்வாகிகள் வலியுறுத்தினர். “தாகம் தீர்க்கும் பந்தலை சேதப்படுத்துவது ஆளுமையும், ஒழுக்கமும் இல்லாத செயலாகும்” என தெரிவித்த அவர்கள், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களிலும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.