திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூர் கழகம் திமுக சார்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் பேரூராட்சி தலைவர் கவிதா சின்னத்தம்பி, தலைமையில் கட்சி நிர்வாகிகள் வெள்ளி தேர் இழுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து நகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஏறாளமான பெண்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி அமைச்சருக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் வழங்க வேண்டி சக்தி வாய்ந்த அம்மனிடம் சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி தலைவர் சிறந்த முறையில் செய்திருந்தார்.