சேலம் மார்ச் -8
தமிழ்நாடுமொபைல் போன் வியாபாரிகள் மற்றும்
விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியை சந்தித்து புகார் மனு வழங்கினர்
அந்த மனுவில் தமிழகத்தில் பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் ஆர்த்ரைஸ்டு விற்பனையாளர்களாகவும் பயன்படுத்திய மொபைல்களை விற்பனை செய்து மொபைல் சர்வீஸ் ஆகியவற்றை செய்து வருகிறோம்
நாங்கள் அனைவரும் சில்லறை வணிகம் செய்து வருகிறோம்.
அதன் படி பல்வேறு மொபைல் பிராண்டுகளில் மொபைல் ஊறிய ரசீதுடன் பழைய மற்றும் புதிய மொபைல்களை மொத்தமாக கொள்முதல் செய்து எங்களின் வாடிக்கையாளர்களிடம் சில்லறை விற்பனை செய்து வருகிறோம்
இந்த நிலையில் தமிழகத்தில் முன்னணி எலக்ட்ரானிக் நிறுவனங்களாக உள்ள பல்வேறு நிறுவனங்கள் நாங்கள் திருட்டு மொபைல் போனை விற்பனை செய்வதாகவும்புகார் கூறி உள்ளனர் நாங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பழைய மொபைல் போனை விற்பனை செய்து வருகிறோம் தற்பொழுது நாங்கள் ஊறிய ரசீது உடன் விற்பனை செய்த பழைய போன் கூட திருட்டு போன் என்று கூறி வருகின்றனர் இதனால் மொபைல் போன் விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம். காவல்துறையினர் எங்களை அச்சுறுத்து வருகின்றனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மொபைல் போன் விற்பனையாளர்களை பாதுகாக்க வேண்டும் கூறிய ஆவணங்கள் இருக்கும் மொபைல் ஃபோனை திருட்டு போன் என்று கூறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மொபைல் போன் விற்பனை மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சோமசுந்தரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.