தென்காசி மாவட்டம் மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியினை மாணவர்களுக்கு தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் வழங்கினார் பின்னர் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார் நிகழ்ச்சியில் காமராஜர் வழியில் கல்விக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அரசாக திமுக செயல்படுகிறது என்று பேசினார் மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 73 மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டியினை வழங்கினர் நிகழ்ச்சியில் மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டி ,மேலகரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம் ,தென்காசி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், மேலகரம் பேரூர் செயலாளர் சுடலை , தென்காசி காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பெருமாள், குற்றாலம் சுரேஷ், குட்டி, கபிலன் மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



