தருமபுரியில் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முத லமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தருமபுரி நகராட்சிக்கு ட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்களில் தொடக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு தருமபுரி நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உணவு தயாரிக்கும் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டு உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. இந்த சமையல் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் திடீர்
ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவுக் கூடம் சுகாதாரமாக பராமரிக்கப்படாமல் இருப்பது தெரிய வந்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் சமையல் செய்யும் இடங்களை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு தூய்மையாகவும், சுகாதாரத்துடன் உணவு தயாரித்து வழங்க வேண்டும். சமையல் கூட மேற்கூரையை சீரமைக்க வேண்டும். என அங்கிருந்த பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தினார். சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கவும் உத்தர விட்டார். மேலும் சமையல் கூடம் இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் இருந்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.