ஈரோடு, அக்.18-
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாட்களே உள்ளதால் இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிப்பதில் வியாபாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்
இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை ஆணையம் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் சில்லரை வியாபாரி களுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வன்,
அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தங்க விக்னேஷ் பேசியதாவது:-
தீபாவளி பண்டிகையை
யொட்டி இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு மற்றும் சில்லரை விற்பனையாளர் அனைவரும் உணவு பாது காப்பு துறை உரிமம் அல்லது பதிவு சான்று கட்டாயமாக பார்வைக்கு வைத்திருக்க வேண்டும்.
இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிட்ட பிறகே விற்பனை செய்தல் வேண்டும். உணவு
பொருட்கள் கையாளு பவர்கள் கையுறை, முக்கவசம், தலைக்கவசம் ஆகியவற்றை அணிந்து பணிபுரிவதை உறுதிப்படுத்த வேண்டும்
இனிப்பு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான செயற்கை வண்ணங்கள் பயன்படு த்தக்கூடாது. உணவு கையாள்பவர்கள் அனைவரும் மருத்துவ சான்றிதழ் பெற்று இருத்தல் வேண்டும்.
ஒருமுறை பயன்படு த்தப்பட்ட எண்ணெய் வகைகளை மறு விநியோகம் செய்தல் கூடாது. மாறாக உபயோகப் படுத்தப்பட்ட எண்ணையை அங்கீகரிக்க ப்பட்ட பயோ டீசல் மறுசுழற்சி நிறுவனங் களிடம் வழங்கி
அதன் ஆவணங்களை வைத்திரு த்தல் வேண்டும்.
பொதுமக்கள் உணவுப் பொருட்கள் குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் இனிப்பு கார வகைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.