அரியலூர்,டிச;
அரியலூர் (நெடுஞ்சாலை), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள செந்துறை (நெ) க(ம)ப உட்கோட்டத்தை சார்ந்த அரியலூர் – ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை சாலையில் 24/0 – 30/0 வரை முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை திரு. மு.சரவணன் இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், சென்னை அவர்கள் ஆய்வு செய்தார், பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுரைகள் வழங்கினார். மேலும் இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், சென்னை அவர்களால் சாலையோரம் மரக்கன்று நடப்பட்டது. ஆய்வின் போது உடன் கண்காணிப்பு பொறியாளர் (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, விழுப்புரம், கோட்டப்பொறியாளர் (நெ), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, அரியலூர், கோட்டப்பொறியாளர் (நெ) தரக்கட்டுப்பாடு, விழுப்புரம்,கோட்டப்பொறியாளர் (நெ)சாலைப்பாதுகாப்பு ,விழுப்புரம். செந்துறை (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, உதவிக்கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் அரியலூர் (நெ) தரக்கட்டுப்பாடு உதவிக்கோட்டப்பொறியாளர் மற்றும் உதவிப்பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்