சுசீந்திரம்.பிப்.4
சுசீந்திரம் அக்கரையில் இருந்து உதிரப்பட்டி செல்லும் பாதையில் தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது இந்த திருமண மண்டபம் அருகே சுடலை என்பவர் மனைவி பகவதி60 சுடலை இறந்து விட்டார் பின்பு பிழைப்பிற்காக சுமார் 20 பசு மாடுகளை பராமரித்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார் அந்த பசு மாடுகளுக்கு தீவனம் வழங்க 600 வைக்கோல்கட்டுகளை கட்டுக்கு ரூபாய் 200 வீதம்சமீபத்தில் விலைக்கு வாங்கி வைக்கோல் படப்பாக போட்டு உள்ளார் இந்நிலையில் நேற்று மதியம் திடீரென வைக்கோல் படப்பில் தீப்பிடித்து எரிந்தது இதனைப் பார்த்த பகவதி அக்கம் பக்கத்தினரிடம் கூவி அழைத்து வைக்கோல் படப்பில் ஏற்பட்ட தீயை அணைக்க தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டும் அணையாமல் தீ கொழுந்து விட்டு எறிந்தது தகவல் அறிந்ததும் தேரூர் கிராம நிர்வாக அதிகாரி புரோஸ்கான்உடனடியாக நாகர்கோவில் தீயணைக்கும் படைக்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பெயரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் இமானுவேல் தலைமையில் தீயணைக்கும் துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து தீயை 4 மணிக்கூருக்கு மேலாக போராடி அனைத்தனர் நல்வாய்ப்பாக திடீரென மழையும் பெய்ததால் தீ சற்று தணிந்தது இல்லை என்றால் வைக்கோல் படப்பிற்க்கு அருகே பசு மாடுகள் கட்டப்பட்டு இருந்தது அவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நல்வாய்ப்பாக தீ சற்று மழையின் காரணமாக குறைந்ததால் பசுமாடுகள் ஏதும் சேதம் இல்லாமல் தப்பித்தது தீயின் புகை அதிகமாக இருந்ததால் அக்கம் பக்கத்தினர் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதோ என அச்சத்தில் இருந்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது
திடீரென வைக்கோல் படப்பில் தீப்பிடித்து எரிந்தது

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics