கோவை பிப்:27
கோவை மாவட்டம் கோவை போத்தனூர் அருகே உள்ள அம்மன் நகர் கதிரவன் நகர் உதயம் நகர் எலைட் அவன் யூ உள்ளிட்ட குடியிருப்புகளில் வசிக்கும் 300-கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் பல காலமாக பயன்படுத்தி வந்த 30 அடி அகல சாலையை சில சுயநலவாதிகளின் தூண்டுதலாலும் தவறான வழிகாட்டுதலாலும் எந்தவித விசாரணையும் இன்றி 30 அடி அகல சாலையை பூங்கா என தெரிவித்து ஒருதலைப் கஷ்டமாக மாநகராட்சி அதிகாரிகள் சாலையை அடைத்து விட்டதால் மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்ல திரண்டு வந்த குடியிருப்பு வாசி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மன் நகர் மனை பிரிவின் உரிமையாளர் சொக்கலிங்கம் தனது நிலத்தை மனை இடங்களாக பிரிக்கும் பொழுது மனை பிரிவின் வடபுற எல்லையில் வெள்ளலூர் ராஜவாய்க்காலை ஒட்டி 30 அடி அகல சாலைக்கு கிழக்காக 2591 சதுரடி இடத்தை மேற்கு புறமாக 1925 சதுரடி இடமும் ஆக மொத்தமாக 416 சதுரடி இடத்தை அம்மன் நகர் மனைப் பிரிவிற்குண்டான ரிசர்வ் சைட்டாக அப்போதைய குறிச்சி பேரூராட்சிக்கு 23-1 -1999 ஆம் தேதி அன்று தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி அதை முறைப்படி பதிவும் செய்து கொடுத்துள்ளதாகவும் மேற்படி 30 அடி அகல சாலையின் இருபுறமும் உள்ள ரிசர்வ் சைட்டை பாதுகாக்கும் பொருட்டு வேலி அமைப்பதாக தெரிவித்து கோவை மாநகராட்சிக்கு குடியிருப்பு பகுதிகளுக்கு எந்தவித முன்னறிவிப்பு இன்றி வேலி போட்டு சாலையை அடைத்து விட்டதாக புகார் கூறிய மூன்று நகரை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டு திடீர் சாலை மறியல் செய்யும் நடத்தப் போவதாக தெரிவித்த குடியிருப்பு வாசி பொதுமக்கள் அமைதியான முறையில் கோவை மாநகராட்சியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு சாலையை உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோவை மாநகராட்சி கதிரவன் நகர் உதயம் நகர் எலைட் அவென்யூ உள்ளிட்ட பொதுமக்களின் கனிவான கோரிக்கையை ஏற்று கம்பி வேலி போட்டு அமைக்கப்பட்டுள்ள சாலையை திறந்து விடவில்லை என்றால் தங்களது ஆதார் கார்டுகளையும் ரேஷன் கார்டுகளையும் மாநகராட்சி இடம் ஒப்படைக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும் என மாநகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அனைவருக்கும் அனைத்தும் என்று கூறும் தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு தேவையான சாலையை திறந்து விட உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.