மதுரை மே 28,
மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் திடீர் ஆய்வு
மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறை இயக்குனர் திடீர் ஆய்வு ஆன்லைன் பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம்.
மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் எஸ் ஏ ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் டிஆர்ஓ உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். மதுரை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் காலை 10:20 மணிக்கு தொடங்கிய ஆய்வு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் வளர்ச்சி பணிகள் மற்றும் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ள என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தது
பட்டா மற்றும் ஆன்லைன் புகார் தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும், புதிதாக பட்டா தொடர்பாக மாவட்ட ரீதியாக அதிகாரிகள் நியமித்து ஆய்வுகள் செய்து வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார்.