ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் தாளாளர் சந்திரசேகர் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் ஆகியோர் பூங்கா மற்றும் குளம் கட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட தளபதி நகரில் புதியதாக கட்டப்பட்டுள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமை இன்று ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் தாளாளர் சந்திரசேகர் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் ஆகியோர் அப்பகுதியில் பூங்கா அமைப்பது மற்றும் குளங்கள் கட்டுவது தொடர்பான பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
தளபதி நகர் இலங்கை அகதிகள் முகாமை கடந்த ஆண்டு மாண்புமிகு முதல்வர் ஆணைப்படி தமிழக அமைச்சர்கள் காந்தி மற்றும் சக்கரபாணி மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் இப்பகுதியில் வீடு கட்டுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்று வருகிறது. இப்பணியை இன்று ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் சந்திரசேகர் மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் மூன்றாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் துணை தலைவர் ஜெயலட்சுமி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இப்பகுதியில் பூங்கா அமைப்பது மற்றும் குளம் கட்டுவது தொடர்பாக பார்வையிட்டார்கள்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஒன்றிய அதிமுக செயலாளர் தேவேந்திரன் பேரூராட்சி அவை தலைவர் தணிகை குமரன் பேரூராட்சி கவுன்சிலர் சுமித்ரா தவமணி லிங்கா ஸ்டில் உரிமையாளர் கார்த்தி தொழிலாளர் அணி சங்கர் இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் குமரவேல் இளையசூரியன் பாஸ்கர் சூரிய பிரகாஷ் அருள்ராஜ் மற்றும் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.