நாகர்கோவில் டிச 17
குமரி மாவட்டம் திட்டுவிளையை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தெரு விளக்குகள் அமைத்து தர கேட்டு எஸ்.டி.பி.ஐ -யினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட திட்டுவிளையின் பிரதான பகுதிகளான மனத்திட்டை, ரஹ்மத் நகர், அப்துல் கலாம் நகர், கிரசன்ட் நகர்,ஐதுரூஸ் நகர்,ஆப்தீன் நகர்,பள்ளி தெரு (கிழக்கு),முகமது கார்டன், ஹாஜி ஹபீப் நகர், ஆசாத் நகர் பழைய ஆறு செல்லும் சாலை போன்ற பகுதிகளில் இன்னும் தெரு விளக்குகள் அமைக்கப்படவில்லை.
இந்தப் பகுதிகள் பிரதான குடியிருப்பு பகுதிகளாகும். இந்த பகுதிகளில் தெருவிளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி விரைவாக தெருவிளக்கு அமைத்து தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் எஸ். டி.பி.ஐ திட்டுவிளை நகர துணை தலைவர் அப்துல் காதர், நகரச் செயலாளர் முகமது ரிஸ்வான், எஸ்டிபிஐ கிழக்கு கிளை தலைவர் ரியாஸ்,மேற்கு கிளை செயலாளர் சாகுல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.