வரலாற்றில் கொரியா-இந்தியாவின் உறவு குறித்து கதை சொல்லல் திரை ஓவியம் கண்காட்சி
சென்னை , பிப்-10, சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள லலிதா கலா அகாடமியில் தனியார் அமைப்பினர் சார்பில் Limits of Change லிமிட் ஆஃப் சேஞ்ச்
( Limits of Change ) என்னும் கதை சொல்லல் திரை ஓவியக்கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதில்
புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் பார்வதி நாயர் அவரது இறந்து போன தந்தை ஜெனரல் நாயர் ஆகியோரின் வாழ்க்கைப் பயணம் கதைகளையும் வரலாற்றையும் இணைத்து, இந்திய-கொரிய உறவு மற்றும் 1953 ஆம் ஆண்டு இந்தியாவின் கஸ்டோடியன் மற்றும் இந்தியாவின் 6,000 வீரர்கள் கொண்ட படையணி, சென்னையிலிருந்து கொரியாவின் சஞ்சால நிலப்பரப்புக்கு பயணித்தது, போர் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண உதவிய வரலாற்று நிகழ்வுகளும் கலந்து கதை சொல்லல் திரையரங்கு நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி
பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்