By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஶ்ரீ ஊர்க்காவல சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ஶ்ரீ ஊர்க்காவல சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா
ஆன்மிகம்சிவகங்கைமாவட்டம்

ஶ்ரீ ஊர்க்காவல சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் விழா

Last updated: June 10, 2024 12:37 pm
June 10, 2024 56 Views
Share
SHARE

மானாமதுரை ஜீன் 10 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குவளையில் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஊர்க்காவல சுவாமி இக்கோயிலானது  இவ்வூரில் சுமார் ஐந்து தலைமுறைகள் கடந்து தற்போது வரை பக்தர்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறது என்று ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.

 

இதனை தொடர்ந்து  வழிபாடு செய்யும்  ஊர்க்காவலன் கோயில் பங்காளிகளின் ஏற்பாட்டில்  கடந்த 2006 ம் ஆண்டில்   மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.  

 

அதே போல் இந்த ஆண்டில்  பங்காளிகள் ஒன்றினைந்து  கோயிலுக்கு புதிய   கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  பணிகள் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து  கும்பாபிஷேக விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு  கடந்த 22/05/24 அன்று கிராம பொதுமக்கள் ஒன்றினைந்து பந்தல் கால் நடப்பட்டு அனைவரும் மஞ்சள் காப்பு கட்டி சுவாமி வழிபாடு பூஜைகள் செய்து வந்தனர்.

 

விழாவை தொடர்ந்து  கீழவெள்ளூர் ஸ்ரீ ஸ்ரீ மணிகண்ட சுவாமிகள் குழுவினரால்  7/6/24 அன்று முதல் காலம் மங்கள இசையுடன் தீர்த்த பூஜை கும்ப அலங்காரம் செய்யப்பட்டு விக்னேஸ்வர பூஜை மகாலட்சுமி பூஜை மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து  இரண்டாம் காலம்  சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மூன்றாம்  காலம் மங்கல இசை முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நான்காம் காலம் மங்கல இசையுடன் ஸ்ரீ ஹரித்ர கணபதி பூஜை சங்கல்பம் புண்யாகவாசனம் ஜெப பாராயணம் கோமாதா பூஜை மூல மந்திர ஜெபகோமம் காயத்ரி ஹோமம் மகாபூர்ணா தூப தீப ஆராதனைகள் செய்யப்பட்டு 

கடம் புறப்பாடாகி ‌கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு  மஹா கும்பாபிஷேகம் பக்தர்கள் கோஷத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

 

அதனைத் தொடர்ந்து  மூலவருக்கும் ஶ்ரீ மஹா கணபதி ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ கருப்பணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

 

இவ்விழாவில் ஊர்க்காவல சாமி கும்பிடும் பங்காளிகள் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் சுமார்  ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கோயில்  நிர்வாகம் சார்பில்  விழா தொடக்கத்திலிருந்து  மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவினை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் பக்தர்கள்  வேண்டுதல் நிறைவேற்றம்  சார்பில் நாடகங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. 

இதனை காண குவளைவேலி கிராம மக்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து  ஏறாளமானோர் வருகை புரிந்து நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். 

இதற்கான விழா ஏற்பாடுகளை ஊர்க்காவலன் கோயில் சுவாமி வழிபாடு பங்காளிகளின் சிறப்பாக செய்திருந்தனர்.

You Might Also Like

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ ஆய்வு

மயிலாடுதுறையில் மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தில் ருத்ர ஹோமம் ருத்ர அபிஷேகம்

விளாத்திகுளம் அருகே நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

திமுக இளைஞரணி சாதனை விளக்க பொதுக்கூட்டம்

அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தேனிமாவட்டம்

அரசு விளையாட்டு மைதானம் வேண்டி ஆம் ஆத்மியினர் கோரிக்கை

June 2, 2024 65 Views
மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு குற்றச்சாட்டு
களியல் அருகே சிற்றாறு 2 அணை பகுதியில் ரிசார்ட்
அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி திருவிழா
வாக்ஸ் குழுமத்தின்17 வது நிறுவனர் தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?