நாகர்கோவில் செப் 19
ஸ்ரீ நாராயண குரு 170-வது குரு ஜெயந்தி விழா மற்றும் எட்டாமடை ஸ்ரீ நாராயண குரு நினைவு மண்டபம் 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஸ்ரீ நாராயண குருவின் திருஉருவ சிலையுடன், சிங்காரி மேளத்துடன் பொதுமக்கள் பங்கேற்ற ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்.
ஸ்ரீ நாராயண குரு 170-வது குரு ஜெயந்தி விழாவும், எட்டாமடை ஸ்ரீ நாராயண குரு நினைவு மண்டபம் 20-வது ஆண்டு விழாவும் ஸ்ரீ நாராயண குரு இல்லத்தார் சமுதாய டிரஸ்ட் சார்பில் எட்டாமடையில் 15-09-2024 முதல் 17-09-2024 வரை நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ நாராயண குருவின் திருஉருவ சிலையுடன், சிங்காரி மேளத்துடன் பொதுமக்கள் பங்கேற்ற ஊர்வலத்தை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண குரு இல்லத்தார் சமுதாய டிரஸ்ட் தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் சுரேஷ் உட்பட பொதுமக்களும் ஸ்ரீ நாராயண குரு இல்லத்தார் சமுதாயத்தினரும் பெருமளவில் பங்கேற்றனர். இவ்ஊர்வலம் எட்டாமடை, கேசவன்புதூர், மேல்கரை, அழகியபாண்டியபுரம் வழியாக நாராயண குரு நினைவு மண்டபத்தில் நிறைவு பெற்றது.