நாகர்கோவில் ஜூன் 16
தாம்பரம்- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கம் சனி, ஞாயிறு மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு, தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, தாம்பரத்தில் இருந்து நேற்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் இன்று காலை 11 மணிக்கு நாகர்கோவிலுக்கு வந்தடையும்.
மறுமாா்க்கமாக நாகர்கோவிலில் இருந்து இன்று பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் ரெயில் நாளை தாம்பரம் வந்தடைகிறது.
அதேபோல், ஞாயிற்றுக்கிழமையும் (16-ம் தேதி) தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கும், பின்னர் மறுமாா்க்கமாக நாகர்கோவிலில் இருந்து 17-ம் தேதி புறப்பட்டு (18-ம் தேதி) தாம்பரத்தையும் சிறப்பு ரெயில் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.