நாகர்கோவில் நவ 18
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம், முள்ளங்கினாவிளை வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம், முதற்கட்ட மனுக்கள் பெறும் நிகழ்ச்சியானது அரசு உயர்நிலைப்பள்ளி, முள்ளங்கினாவிளையில் 19.11.2024 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படுகின்றன.
எனவே முள்ளங்கினாவிளை வருவாய் கிராமத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.