மதுரை மத்தியச் சிறையில் மாதம் 13 ஆயிரம் லிட்டர் அளவிற்கு நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து கிளை சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் ஜவுளி, மர சாமான்கள் உற்பத்தியிலும் மதுரை மத்திய சிறையில் டிஐஜி உத்தரவின் பேரில் கண்காணிப்பாளர் தலைமையில் மதுரை மத்திய சிறை கைதிகள் அசத்தி வருகின்றனர். மதுரை மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை சிறைக்கைதிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இதில் தண்டனை கைதிகள் மட்டும் 700 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களின் மறு வாழ்விற்காக சிறைக்குள் எண்ணெய் தயாரிப்பு மற்றும் ஜவுளி, மர சாமான்கள் உற்பத்தி செய்யும் கம்பெனி உள்ளது. எண்ணெய் தயாரிப்புக்காக, நவீன எண்ணெய் செக்குகள் 2 உள்ளன. எண்ணெய் தயாரிப்பதற்கு பயன்படும் நிலக்கடலை, எள், கொப்பரைத் தேங்காய் முழுவதும் மதுரையிலேயே சிறை நிர்வாகத்தினர் கொள்முதல் செய்து விடுகின்றனர். இவற்றை பயன்படுத்தி கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் என மாதத்திற்கு சுமார் 13 ஆயிரம் லிட்டர் வரை தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகளில் அடைத்து சென்னை புழல் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள மாவட்ட சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு கிலோ நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் வெளி மார்க்கெட்டை விட 30 சதவிகிதம் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மதுரை மத்திய சிறையில் டிஐஜி உத்தரவின் பேரில் கண்காணிப்பாளர் தலைமையில் மதுரை மத்திய சிறைக்கைதிகளின் மறுவாழ்விற்கு பல்வேறு சிறப்புத் திட்ட அம்சங்களை நடத்தி வருகின்றனர்.
மறுவாழ்விற்கு சிறப்புத் திட்டங்கள்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics