முதுகுளத்தூர் அக் 01
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற 3-வது நாள் சிறப்பு முகாமில் தீயணைப்பு மற்றும் பேரிடர் துறையின் மூலம் மாணவர்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
இதில் பள்ளி என்.எஸ்.எஸ் சார்பில் 7 – நாள் சிறப்பு முகாம் மு.தூரி கிராமத்தில் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் 3-வது நாள் சிறப்பு முகாமில் முதுகுளத்தூர் தீயணைப்பு மற்றும் பேரிடர் துறையின் பொறுப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் மு.தூரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
அனைவரையும் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் மங்களநாதன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு அலுவலர்கள் புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் தங்களையும் பொதுமக்களையும் எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீ காயம், கொடிய வகை விஷபாம்பு , கடித்தால் அதனை எவ்வாறு முன் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்பது குறித்து என்.எஸ்.எஸ். மாணவர்களை வைத்து செயல் விளக்கம் மூலமாக தீயணைப்புத் துறையினர் செய்து காட்டி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இதில் என் .எஸ் .எஸ் மாணவர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுடனர் . அதன் பின்னர் தெருக்கள், பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டது
முகாம் நிறைவில் தொழிற்கல்வி ஆசிரியர் சண்முகநாதன்
நன்றி கூறினார்.