நாகர்கோவில் – அக் – 09,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இலங்கையை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரதாபன் தர்மலிங்கம் இந்தியாவின் இயற்க்கை வளங்களையும் , வன உயிரினங்களையும், சுற்று சூழலையும், பாதுகாக்க வலியுறுத்தியும் சைக்கிளில் இந்தியா முழுவதையும் சுற்று பயணம் மேற்க்கொண்டு வருகிறார். நேற்று 117-வது நாளாக கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை வந்தடைந்தார். அவருக்கு சமூக ஆர்வலர்கள் குளச்சல் முகமது சபீர், கவிஞர் இனியன் தம்பி, வழக்கறிஞர் ஜெயபாரதி, ஹபீஸ், சுல்பிக்கர், சுலைமான், முஜிப் ரகுமான், அமீர்கான், மாகீன் , இப்ராகிம், வேல்முருகன் , இடலை எம்.ஹெச். சாகுல் ஆகியோர் இந்தியா வந்திருக்கும் பிரதாபன் தர்மலிங்கத்தை சிறப்பான முறையில் வரவேற்று, வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவர் குமரியில் இருந்து இராமேஸ்வரம் வழியாக பாண்டிசேரி சென்று அதன் பின்பு சென்னை மத்திய இரயில் நிலையத்தில் தனது பயணத்தின் இலக்கான 15000 கிலோ மீட்டர் பயணத்தை நிறைவு செய்கிறார் என அவர் கூறினார்.