நாகர்கோவில் ஜூலை 11
கன்னியாகுமரி மாவட்டத்தில கால்வாய் தூர் வாருதல், குளம் கரை கட்டுதல் உள்ளிட்ட கட்டுமான பணிகளை முடித்த ஒப்பந்தகாரர்களுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் பில் தொகை வழங்காமல் இழுத்தடிக்கும் செயற்பொறியாளரை கண்டித்து நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு 50 க்கும் மேற்பட்ட ஒப்பந்தகாரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளம் தூர் வாருதல் கரைகள் கட்டுதல், சீரமைத்தல். கால்வாய்கள் சீரமைத்தல் போன்ற பணிகளை பொதுப்பணித் துறையினர் ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்து வருகின்றனர் . அந்த வகையில் கடந்த நிதி ஆண்டில் இது போன்ற பணிகளை செய்து முடித்தும் ஒப்பந்தகாரர்களுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் பில் தொகை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வரும் நாகர்கோவிலில் உள்ள . செயற்பொறியாளர் ஜோதிபாசுவை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட ஒப்பந்தகாரர்கள் பொதுப் பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது இதனால் பணிகள் பாதிப்படைந்துள்ளது எனவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.