By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செயற்கைகோள் இணைப்புடன் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தவேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > Blog > செயற்கைகோள் இணைப்புடன் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தவேண்டும்
Blog

செயற்கைகோள் இணைப்புடன் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தவேண்டும்

Last updated: May 27, 2025 12:36 am
May 27, 2025 5 Views
Share
SHARE

கடலில் இனி ஒரு மீனவர் உயிர்கூட போகாமலிருக்க செயற்கைகோள் இணைப்புடன் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தவேண்டும்
மத்திய- மாநில அரசுகளுக்கு நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை…

ஆழ்கடலில் மீன்பிடித்தொழில் செய்யும் மீனவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் உடனடியாக மீட்க செயற்கைக்கோள் இணைப்புடன் கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் செயல்படுத்தவேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் கோரிக்கை வைத்துள்ளார்.
அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது…
ஏறக்குறைய 8000 கி.மீ. நீளமுள்ள இந்திய கடற்கரைகளில் வாழும் மீனவ மக்கள் கடலையும் கடல்வளங்களையும் நம்பியே தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்திவருகின்றனர். கடல் தோன்றிய காலத்தில் தோன்றிய ஆதிக்குடி சமூகமான கடலோடிச் சமூகம் கடலில் மீன்பிடிக்கும்போது பேரிடர்களாலும் பெரும்புயல்களாலும் கடல் கொந்தளிப்புகளாலும் சூறைக்காற்றுகளாலும் இயந்திரக் கோளாறுகளாலும் இடிமின்னல்களாலும் பெரும் மழையாலும் தினம் தினம் விபத்துகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். கரைக்கடல் பகுதிகளில் நடக்கும் விபத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ள மீனவர்கள் தங்கள் தொழில் படகுகளையே மீட்புப் படகுகாக பயன்படுத்துகின்றனர். முடியாத கட்டத்தில் கைகளால் நீச்சலடித்துக் கரைசேர்கின்றனர்.
ஆழ்கடலில் ஏற்படும் விபத்துகளிலிருந்து தங்கள் உயிரையும் உடமைகளையும் மீட்க அரசின் உதவியைத்தான் நாடவேண்டிய சூழல் உள்ளது. அரசிடம்தான் தற்காப்பு இயந்திரங்களும் மீட்புப் படைகளும் நவீன மீட்புக் கருவிகளும் கடலோரப் படைகளும் உள்ளன. ஆழ்கடலில் விபத்துக்கு ஆளாகும் மீனவர்களை சரியான நேரத்தில் மீட்காவிட்டால் உயிரிழப்புகள் ஏற்படுவதோடு அவர்கள் உடல்கள்கூட கிடைக்காமல் காணாமல் போன சோகங்கள் நிகழ்வதுண்டு. குமரிமாவட்டத்தில் மட்டும் கடந்த 25 ஆண்டுகளில் சுமார் 200 மீனவர்கள் காணாமல் போன நிகழ்வுகள் நடந்திருக்கிறது.
விபத்துகள் ஏற்படும்போதும் குறிப்பிட்ட நாள்களில் கரைவந்து சூழல்களிலும் மீனவர்களைத் தேடிச்சென்று உயிருடன் மீட்டுக் கொண்டுவர அரசுக்குக் கோரிக்கை வைத்து பல நேரங்களில் ஏமாற்றங்களையும் உயிரிழப்புகளையும் பரிசாகப் பெற்றனர். தங்கள் உறவுகளை இழந்த தாய்மார்களும் சகோதரிகளும் தாங்கள் சுமங்கலியா? இல்லை விதவையா?என்பதுகூடத் தெரியாமல் மனம் கலங்கி நிற்கின்றனர். தங்கள் உச்சபட்ச நம்பிக்கையான இறந்த உடல்களை நல்லடக்கம் செய்தால்தான் மோட்சம் கிட்டும் என்ற ஆன்மீக நம்பிக்கையும் சிதைந்துபோன சமூகமாக உள்ளது.
ஆபத்திலிருந்து மீனவர்களை மீட்க அதிநவீன விசைப்படகுகளை அனுப்புங்கள்; நேவி கப்பல்களைக் கொண்டு தேடுங்கள்; கோஸ்ட் கார்டு கப்பல்களை அனுப்புங்கள்; ஹெலிகாட்டர்களையும் விமானங்களையும் கொண்டு தேடிப்பிடித்து உயிருடன் மீட்டுத் தாருங்கள் என்று மீனவர்கள் வைக்கும் கோரிக்கைகள் அரசு இயந்திரங்களால் உதாசீனப்படுத்தப்படுகிறது. அதிநவீன படகு இருக்கும் ஓட்டுநர் இருக்கமாட்டார். படகும் ஓட்டுநரும் இருக்கும் புயலில் படகு செல்ல முடியாது அல்லது ஓட்டுநர் உயிர் பயத்தால் தேடிச் செல்லமாட்டார். ஹெலிகாப்டர் அனுமதி வாங்கவே இரண்டு மூன்று நாட்களாகிவிடும். அப்படியே அனுமதி வாங்கிப் பறந்தாலும் 150 கி.மீ.க்குமேல் ஒரே நேரத்தில் பறக்க முடியாது. மழைக்காலங்களில் ஹெலிகாப்டர் பறக்காது. கப்பல்கள் 60 கடல்மைல்களுக்குமேல் தேட அனுமதி இல்லை என்று பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைச் சொல்லி மீனவர்களைத் தேடிக்கண்டுபிடித்து உயிருடன் மீட்பதில் சுணக்கம் காட்டுகின்றனர்.
கடலில் காணாமல் போகும்- விபத்துகளில் சிக்கும்- பேரிடர்களில் மாட்டும் மீனவர்களை மீட்டுக்கொண்டுவர கடல் ஆம்புலன்ஸ் என்ற ஒரு சிஸ்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒக்கி புயலுக்குப்பின்பு நெய்தல் மக்கள் இயக்கம் மத்திய- மாநில அரசுகளுக்கு வைத்துக்கொண்டிருக்கிறது. கடல் ஆம்புலன்ஸ் என்று சொன்னதுமே மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளுக்கு மனதில் தோன்றுவது அனைத்து மருத்துவ வசதிகளையும் உள்ளடக்கிய அதிவிரைவு எஞ்சின் கொண்ட விசைப்படகும் ஹெலிகாப்டரும்தான். கரைக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு விசைப்படகும் ஹெலிகாப்டரும் போதுமானது. ஆனால் 250,300 கடல்மைல் தொலைவில் மீன்பிடிக்கும் மீனவர்களை மீட்க இது சாத்தியப்படாது. 300 கடல்மைல் தொலைவில் உயிருக்குப் போராடும் மீனவனை தேடி சென்று சேரவே அதிநவீன படகுக்குக் குறைந்தது இரண்டு நாட்களாகும்.150 கி.மீ. தூரத்துக்குமேல் செல்லமுடியாது என்று சொல்லி பாதிவழியிலேயே ஹெலிகாப்டர் திரும்பிவிடும்.
அதனால்தான் செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய ஒரு சிஸ்டத்தை உருவாக்கினால் மீனவர்கள் விபத்துக்குள்ளாகும்போது கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு சிக்னல் அனுப்பினால் அதை பெற்றுக்கொண்டு விபத்தில் மாட்டிய மீனவன்இருக்கும் ஜிபிஎஸ் நம்பர் பகுதியில் எந்த படகோ, எந்த கப்பலோ இருந்தால் அவர்களுக்கு உடனே தகவல் கொடுத்து அங்கே விரைந்து சென்று மீனவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் சேர்க்கவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
இந்த செயற்கைக்கோள் இணைப்புடனான கடல் ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டிய தேவை இல்லை. மத்திய- மாநில அரசுகள் இணைந்து கப்பல் படையுடன் சேர்ந்து ஒரு சிஸ்டத்தை உருவாக்கி கண்காணித்தாலே கடல் ஆம்புலன்ஸ் திட்டம் வெற்றிபெறும். இனி ஒரு மீனவன்கூட கடலில் உயிரிழக்கவோ காணாமல்போகவோ கூடாது என்ற வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தன் கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

You Might Also Like

குமரியில் வயதான தம்பதிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நகையை பறித்துச் சென்ற பெண்: போலீஸ் வலைவீச்சு

களியக்காவிளை வாறுதட்டு பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த “நிமிர்” விழிப்புணர்வு நிகழ்ச்சி

மணலோடை பழங்குடியினர் நல மாணவர் விடுதி- பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறப்பு

சீமை கருவேல மரங்களைஅகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 32-வது வார்டில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி கருணாகரபுரி

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

$8 மில்லியன் முதலீட்டிற்கு பெறும் மைண்ட்க்ரோவ் டெக்னாலஜிஸ்

December 24, 2024 18 Views
மதுரை அதலை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்
திவ்யாஸ் பியூட்டி பார்லர் திறப்பு விழா
எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
சங்கரன்கோவில் அருகே கோயில் விழாவில் தீ விபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?