கலசலிங்கம்பல்கலையில் அறிவியல் தின விழா!
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் அறிவியல் தினவிழா ஆர்கிடெக்சர்,சிவில் துறை சார்பில் வேந்தர் முனைவர் கே ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசிஆனந்த் ,பள்ளி மாணவர்களுக்கு நடந்த டவர் அமைப்பு,பிரிட்ஜ் கட்டுதல்,மாதிரி வடிவமைப்பு, பெயிண்ட்டிங், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு,
சான்றிதழ்கள், ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கி. பேசினார்.
துணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் துவக்கி வைத்துப் பேசினர் ஆர்&,டி இயக்குநர் பள்ளிகொண்ட ராஜ சேகரன், டீன்கள் வி.ஆறுமுகப்பிரபு, ஹெச்.அகமெத் பாசில் அக்ரம், துறைத் தலைவர்கள் பி.எல்.மெய்யப்பன், எல்.வினுபாண்டியன், முன்னிலை வகித்து பேசினர்.விருதுநகர், மதுரை மாவட்ட 15 பள்ளிகளில் இருந்து 150 மாணவர்கள்,ஆசிரியர்கள் வந்திருந்தனர். பேராசிரியர் கே.முகிலன் நன்றி கூறினார்.