ஆரல்வாய்மொழி, நவ.02:
குமரி மாவட்டம் தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சஷ்டிவிழா அன்னதானத்தினை எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
தோவாளை செக்கர்கிரி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹார விழாவினை முன்னிட்டு 2 – ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. கந்த சஷ்டி பூஜையிணை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாதனையும் நடைபெறுகிறது. சஷ்டி விழா காலையில் செக்கர்கிரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், ஆரல்வாய் மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தாணு, கிருஷ்ணன்கோவில் பக்தர்கள் சங்க தலைவர் கண்ணன். செக்கர் கிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் விழாக்குழுவை சார்ந்த கருணாநிதி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்