நாகர்கோவில் – நவ – 14,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் கேட்ட வரம் தரும் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது.
புனித சவேரியார் பேராலயம் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முதன்மை கத்தோலிக்க ஆலயமாகும் . கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை ஆலயமாகவும் இது விளங்குகிறது. 1544 – ல் கன்னியாகுமரி மாவட்டத்திற்க்கு கிருஸ்தவ மதத்தை பரப்ப வந்த புனித சவேரியாரால் இவ் ஆலயம் சிறிய அளவில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜாதி, மத, இன, பாகுபாடு இன்றி ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களை ஒவ்வொரு நாளும் அற்புதங்களால் ஈர்த்துக் கொண்டிருக்கின்றது . இந்த ஆலயம் உலகில் புனித சவேரியாருக்கு என முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையுடன் கம்பீரமாக நிற்கும் இந்த பேராலயத்தின் அழகு பொலிவும் அற்புத அருளின் பொலிவும் பக்தர்களை ஆனந்த பரவசம் அடைய செய்கிறது. இத்தனை பிரசித்தி பெற்ற புனித சவேரியாரின் பேராலய திருவிழா வரும் 24- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியேற்று விழாவை தொடர்ந்து ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறுகிறது . தேர் திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையும் விடப்படும். திருவிழாவின் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒப்புரவு அருட் சாதனம் வழங்கப்படும் , பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் ஒவ்வொரு ஆலயத்தை சேர்ந்த பங்கு பேரவை பணியாளர்கள் தலைமையில் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது.
கோட்டாறு மறை மாவட்ட முதன்மை அருட்ப பணியாளர் ஜான் ரூபஸ் தலைமையில் திரு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் கூறப்பட்டது. அது போன்று மேலும்
ஆலய புனரமைப்பு பணிக்காக தமிழக அரசின் திட்டத்தின் கீழ் 2.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் முதற்கட்டமாக 1.14 கோடி அளவில் நிதி பெறப்பட்டு ஆலய புனரமைப்பு பணிகள் நடைபெற்றது, பின்னர் சில மாதங்கள் கடந்து புதிய அரசாணை வெளியிட்டதின் படி பணிகள் முடிக்கப்பட்ட பின்பே நிதி வழங்கப்படும் என்பதின் படி மீதமுள்ள தொகை வழங்கப்படாமல் இருந்து வந்தது, இதை கருத்தில் கொண்டு 74 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணிகள் நடைபெற்றது, அதில் முக்கிய பணிகளாக புனித சவேரியார் தேர், மிக்கேல் அதிதூதர் தேர், ஜெபஸ்டியார் தேர் ஆகிய தேர்களும் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வரும் 17- ஆம் தேதி அர்சிக்கப்படுகிறது, இன்னும் மீதமுள்ள பணிகளையும் முடித்த பின்பு மட்டுமே நிலுவையில் உள்ள தொகை வழங்கப்படும் என்பதால் நிதி நெருக்கடியின் காரணமாக மீதமுள்ள பணிகள் நிலுவையில் உள்ளது, மீதமுள்ள பணியையும் தங்கு தடையின்றி முடிக்க இந்த நிலுவைத் தொகையில் 70% உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க . ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனவும் நேற்று
ஆலய வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பங்கு பேரவை துணைத் தலைவர் ஜேசுராஜா தெரிவித்தார்.. இந்த செய்தியாளர் சந்திப்பில் பேராலய பங்கு தந்தை பஸ் காலிஸ் , உதவி பங்கு தந்தை ஷாஜன் செசில் , பங்கு பேரவை செயலாளர் ராஜன், பங்கு பேரவை துணைச் செயலாளர் ராஜன் ஆராச்சி, பங்கு பேரவை பொருளாளர் ஜார்ஜ் பிரகாஷ், ராபின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.