மதுரை மே 29,
மதுரை பள்ளிகளில் நலிவடைந்த பிரிவின் குழந்தைகளுக்கு ஆர்.டி.இ., சேர்க்கைக்கான குலுக்கல் மூலம் 382 பள்ளிகளுக்கு 25 விழுக்காட்டில் 4044 இடங்கள் ஒதுக்கீடு மதுரை மாவட்டம், தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம், 2009 பிரிவு 12(1) (c) இன் படி அனைத்து சிறு பான்மையற்ற தனியார் சுய நிதிப்பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் நுழைவு நிலை வகுப்பில் (LKG/I st std) குறைந்தபட்சம் 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிடும் பொருட்டு தகுதியுள்ள 382 பள்ளிகளுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டுப்படி 4044 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேற்படி தகுதியுள்ள இடங்களுக்கு பெற்றோர்களிடமிருந்து இணைய தளம் மூலம் 22.4.2024 முதல் 20.5.2024 முடிய 8591 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதனை ஆவணங்கள் மற்றும் விதிகளின்படி சரி பார்க்கப்பட்டதில் 7913 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டும் 99 விண்ணப்பங்கள் தகுதியற்றவை எனவு 579 நபர்கள் விண்ணப்பங்களில் உரிய ஆவணம் இல்லை என முடிவு செய்யப்பட்டு தகுதிவாய்ந்த விண்ணப்ப தார்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இடத்தினை விட கூடுதலாக விண்ணப்பங்கள் இருக்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் தேர்வு செய்திடும் பணி 28..5.2024 காலை 9.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று இப்பணிக்கான அரசு பார்வையாளர்களாக அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 382 பேர்கள் நியமனம் செய்யப்பட்டு இவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 27,5,2024 மாலை 2.00 மணியளவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்றது. மேற்படி அரசு பார்வையாளர்கள் முன்னிலையில் ஒளிவு மறைவு அற்ற முறையில் குலுக்கல் நடைபெறும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியல் மற்றும் காத்திருப்போர் பட்டியல் ஆகியவை 29.5.2024 இன்று பள்ளி அறிவிப்புப்பலகையில் ஒட்டப்படும் இப்பணிகள் எவ்விதமான புகாருக்கும் இடமளிக்காமல் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்லைவர் முதன்மைக்கல்வி அலுவலர். மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் உதவித்திட்ட அலுவலர்கள் பார்வையிடுவார்கள் என்றனர்.