ராமநாதபுரம், பிப்.10-
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் R.S. மங்கலம் பேரூர் மனிதநேய மக்கள் கட்சி 17 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றி ஏறாளமான மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது . மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மமக மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மமக மாவட்ட தலைவர் பட்டாணி முன்னிலை வகித்தார். தமுமுகவின் மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சிக்கொடி ஏற்றினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட :மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் N.முஹம்மது ஜிப்ரி.. மமக மாவட்ட துணை செயலாளர் சகுபர் அலி, தமுமுகவின் மாவட்ட துணை செயலாளர் அஹமது அசன் மற்றும் ஆர்எஸ் மங்கலம் நிர்வாகிகள் அப்துல் ரஹ்மான் இர்சாத் புகாரி ஆசிக் நிஜாம் கிசான் ராவுத்தர் அப்சர் ரியாஸ் ரசீன் அப்சல் அதாவுல்லா அசாஸ் இர்பான் ஆகிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். செய்யது அபுதாஹிர் நன்றி கூறினார்.