ஆரல்வாய்மொழி, ஜன.05:
சாமிதோப்பு ஊராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் மற்றும் சாஸ்தான்கோவில் விளையில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடங்களை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்.
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், சாமிதோப்பு ஊராட்சி காமராஜபுரம் மற்றும் சாஸ்தான்கோவில் விளையில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 – 2024-ம் ஆண்டு நிதியின் கீழ் தலா ரூ. 4 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடங்களின் திறப்புவிழா அந்தந்த பகுதிகளில் சாமிதோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அம்மா பேரவை தலைவர் என்.பார்த்தசாரதி, சாமிதோப்பு ஊராட்சி துணைத்தலைவர் ஜெயபார்வதி, உறுப்பினர்கள் அய்யாபழம், தங்கபத்மா, ராமகிருஷ்ணன், சரவணன், பாலமுருகன், சாந்தி, சரண்யா, சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பயணிகள் நிழற்கூடங்களை தளவாய்சுந்தரம் திறந்து வைத்து பேசும் போது கூறியதாவது,
சாமிதோப்பு ஊராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் மற்றும் சாஸ்தான்கோவில் விளை பகுதிகளில் நிழற்கூடங்கள் அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனடிப்படையில் தலா ரூ. 4 இலட்சம் மதிப்பீட்டில் இப்பகுதிகளில் நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் குரலுக்கு மதிப்பளித்து இப்பகுதிக்கு தேவையான இதனை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். உங்களின் அன்பும் ஆதரவும் எனக்கு என்றும் இருக்கும். தொடர்ந்து உங்களுக்காக உழைத்து கொண்டே இருப்பேன். உரிமையோடு உங்களது தேவைகளை, கோரிக்கைகளை கூறுகிறிர்கள். அதனை நிறைவேற்ற என்றும் கடமை பட்டுள்ளேன். மக்களின் நலனுக்காக எனது பணிகள் என்றும் தொடரும். எனது நம்பிக்கையே மக்களின் பலம் தான். புத்தாண்டில் உங்களை சந்திக்கும் வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தி, இந்நாளில் உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தினேஷ், பொருhளர் தங்கவேல், அகஸ்தீஸ்வரம் பேரூர் கழகச் செயலாளர் சிவபாலன், ஒன்றிய விவசாய அணி பொருளாளர் சிவபாலன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி கவுன்சிலர் விஜயன், அகஸ்தீஸ்வரம் ரமேஷ், கிளை கழகச் செயலாளர்கள் பொன்ராஜ், வைகுண்ட பிரபு, தங்கராஜா, ஆட்டோ கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.