நாகர்கோவில் டிச 30
நாகர்கோவில் மாநகர் 33-வது வார்டு மேலச்சூரங்குடி ஊர்வகை சுடுகாட்டிற்கு சொல்லும் சாலையை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை எம் ஆர் காந்தி எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார். நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 45-வது வார்டு உறுப்பினர் சதீஷ் தலைமை வகித்தார். துணை மேயர் மேரிபிரின்லதா, முன்னாள் நகராட்சி தலைவர் மீனாதேவ், கவுன்சிலர்கள் முத்துராமன், ஆன்றோ னைட்ஸ்னைடா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடன் ஊர் செயலாளர் பல்பநாதன், பொருளாளர் ராஜசேகர், நிர்வாகி பரமசிவன்,செந்தில் மற்றும் பாஜக நிர்வாகிகள் கிளைத் தலைவர் பாலாஜி,வார்டு தலைவர் மதன், சந்திரசேகர், சிவராஜன், சரண்ராஜ், பாபு, உமா மகேஸ்வரி, அஜின் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.