திருவள்ளூர்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2025-ஐ முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் – 2025 நிறைவு நாளை முன்னிட்டு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர், எஸ்பி சீனிவாச பெருமாள் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்பேரணியில் 150 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பாதுகாப்பான வேகத்தில் செல்ல வேண்டும்.
செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள்
மது அருந்தி விட்டு வாகனத்தை ஓட்ட வேண்டாம், திரும்பும் முன் சிக்னல் செய்யவும், இரவில் எதிரில் வாகனம் வரும் போது விளக்கின் வெளிச்சத்தை குறைக்கவும், பின்புறம் சிவப்பு விளக்கு அவசியம்
சாலை சந்திப்புகளில் வேகத்தை குறைக்க வேண்டும். போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் கைகளில் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து துவங்கப்பட்ட இந்த பேரணியானது, நகரின் முக்கிய சாலை வழியான
சென்னை, திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக காமராஜர் சிலை வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் வளாகம் வந்தடைந்தது. முன்னதாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் மாவட்ட ஆட்சியர் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.