மதுரை ஜனவரி 30,
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து அரசு மகளிர் பல் தொழில் நுட்ப கல்லூரியின் மாணவிகள் 200 பேர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழா முன்னிட்டு சாலை விழிப்புணர்வு
பதாகைகளுடன் கல்லூரியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது. இதில் நகர் போக்குவரத்து உதவி ஆணையர் செல்வின், போக்குவரத்து ஆய்வாளர்கள் தங்கமணி, நந்தகுமார், பூர்ணகிருஷ்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் அமுதா கலந்து கொண்டு உறுதிமொழி மேற்கொண்டன