ஈரோடு ஜூலை 25
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது இந்த கோவிலில் மலைப்பாதை மேம்படுத்துதல் மற்றும் சீரமைத்தல் பணி ரூ 6 கோடியே 70 லட்சம் செலவிலும் மலைக்கோவில் பின்பகுதியில் பக்தர்கள் உணவருந்தும் கூடம் ரூ 83 லட்சம் செலவிலும் கட்டப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது
இதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இதை தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார் மாநகராட்சி துணைமேயர் செல்வராஜ் இந்து அறநிலைய துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ சென்னிமலை பேரூராட்சி தலைவர் தேவி அசோக் சென்னிமலை கோவில் செயல் அலுவலர் சரவணன் ஆய்வர் மாணிக்கம் பெருந்துறை சரக ஆய்வர் குகன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.



