மதுரை ஜனவரி 25,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண் தம்புராஜ் தலைமையில் மதுரை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை-திட்ட இயக்குநர் மோனிகா ராணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கே.அர்விந்த், உதவி ஆட்சியர்(பயிற்சி) வைஷ்ணவி பால், மாவட்ட காவல் துணை ஆணையர் ஜி.எஸ் அனிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். சக்திவேல் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளார்.