இராமநாதபுரம் மாவட்டத்தில் 1434 பசலிக்கான ஜமாபந்தி 20.05.2025 தேதி முதல் 29.05.2025 தேதி வரை நடைபெறுகிறது. கீழக்கரை வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு தலைமையிலும், பரமக்குடி வட்டத்தில் சார் ஆட்சியர் அபிலாஷா கெளர் தலைமையிலும், இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் இராஜமனோகரன் தலைமையிலும், கடலாடி வட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் செல்வி தலைமையிலும், இராமநாதபுரத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.மணிமாறன் அவர்கள் தலைமையிலும், கமுதி வட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.மாரிமுத்து அவர்கள் தலைமையிலும், இராமேஸ்வரம் வட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (மறுவாழ்வு) மண்டபம் அகதிகள் முகாம் ராஜா தலைமையிலும், திருவாடானை வட்டத்தில் மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி தலைமையிலும் நடைபெறுகிறது.
இன்றைய தினம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில், முதுகுளத்தூர் வடக்கு உள்வட்டத்தைச் சேர்ந்த மேலமுதுகுளத்தூர் குரூப், கீழமுதுகுளத்தூர், புல்வாய்க்குளம், நல்லூர், கீரனூர், மணலூர் மற்றும் ஆனைசேரி ஆகிய கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது. இதில் மேற்கண்ட கிராமங்களின் கிராம கணக்குகளான அடங்கல், பட்டாமாறுதல்கள், உட்பிரிவு மாறுதல்கள், முதியோர் ஓய்வூதியர்கள் பதிவேடு உள்ளிட்ட கிராமக் கணக்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல் மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், மனுக்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொண்டு காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வின்போது புள்ளியியல்துறை துணை இயக்குநர் ஜெய்சங்கர், முதுகுளத்தூர் வட்டாட்சியர் கோகுல்நாத், தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலத்துறை) ஸ்ரீதரன் மாணிக்கம், தனி வட்டாட்சியர் (ச.பா.தி) மரகத மேரி மற்றும் மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், T.பாலகிருஷ்ண் மாவட்ட பொருளார் கிராம நிர்வாக அலுவலக சங்கம், V.ராேஜஷ்வரன் வட்ட தலைவர் , சிவகுமார் வட்ட செயலாளர், மணிமுர்த்தி, தனவேந்தன் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.