சிவகங்கை:ஏப்:08
சிவகங்கையை அடுத்துள்ளது கீழ வாணியங்குடி கிராமத்தைச்
சேர்ந்தவர் ஏ. மகாலிங்கம் . இவர் சிவகங்கையில் டீ – மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் . இவர் தனது ஊரில் புறம்போக்கு இடத்தில் 3 – சென்ட் அளவில் ஓட்டு வீடு கட்டியுள்ளார். இவர் வீடு கட்டியுள்ள இடத்திற்கு பட்டா வேண்டும் என்று பலமுறை சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்ததாக கூறப்படுகிறது . பட்டா கிடைக்காத நிலையில் மகாலிங்கம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வரும்போது திடீரென குறுக்கிட்டு தரையில் படுத்து கொண்டு பட்டா கொடுங்கள், உதவி செய்யுங்கள் என்றார் .
மாவட்ட ஆட்சியர் சென்ற பிறகும் தரையில் உட்கார்ந்தும் , படுத்துக் கொண்டும் மனைப் பட்டா வேண்டும் என்றார் . பின்னர் அங்கு காவலுக்கு இருக்கும் போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அழைத்துச் செல்கிறேன் தீர்வு காணலாம் எழுந்து வாருங்கள் என்று பல முறை சொல்லியும் அவர் கேட்கவில்லை . பின்னர் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அதிகாரியிடம் அனுப்பி வைத்தனர் . அதன் பிறகு அவரின் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது அவர்கள் விசாரணை செய்தார் .விசாரணையில் அவர் குடியிருக்கும் இடம் பறைசாற்று ஊரணி என இருப்பதால் இதற்கு உடனடியாக பட்டா வழங்க முடியாது . உங்களுக்கு மாற்று ஏற்பாட்டை செய்ய முயற்சிக்கிறோம் என்று கூறியதால் மகாலிங்கம் விரைவில் வழங்குமாறு கூறிவிட்டு சென்றார். இருப்பினும் இவர் திடீரென செய்த தனிப்பட்ட ஒரு போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது .