வழக்கறிஞரும் சமூகஆர்வலருமாக உள்ளவர் உயிருக்கு ஆபத்து என கூறி
போலீஸ் பாதுகாப்பு வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவருபவர் ஷங்கமித்திரன், பல ஆண்டுகளாக சிறுமிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காகவும் போக்சோ சட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தக் கோரியும் மணல் மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றிற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திவருபவர், இதனால் போலீசாருக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது, இந்நிலையில் ஷங்கமித்திரன் வழக்கறிஞர்மீது சென்னை பார் அசோசியேஷனுக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.
2012ல் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் இவரைக் கொல்ல முயற்சித்த வழக்கிலும், மயிலாடுதுறையில் வீட்டை அபகரித்த வழக்கிலும் பவுன்ராஜைக் கைதுசெய்யாமல் போலீசார் அவருக்குசாதகமாக இருப்பதாலும் கஞ்சா, மணல்மாஃபியா, கள்ளச்சாராயக் கடத்தல் பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்களிடமிருந்து பாதுகாக்கவும். தமது வழக்கறிஞர் தொழிலை முடக்க அரசு வழக்கறிஞருடன் கூட்டு சேர்ந்து தனிப்பிரிவு ஆய்வாளர் பாலசந்தர் தூண்டுதலால் காவல்கண்காணிப்பாளர் நடப்பதால், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்து பாதுகாப்பு கோரினார்.