ஊட்டி. ஜன. 29.
ஊட்டி ஊராட்சி கக்குச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பாக்யாநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளி வளாகத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு ஒரு பகுதியில் மட்டும் சுவர் அமைக்கப்படவில்லை இதனால் கரடி போன்ற வனவிலங்குகள் பள்ளியில் புகுந்து கதவுகளை உடைத்து உணவு பொருட்களை சேதப்படுத்துகிறது. இந்நிலையில் பாக்கிய நகர் முதல் 200 மீட்டர் தூரம் வரை கழுவுனீர் கால்வாய் அமைக்கப்பட்டு பள்ளி வரை 100 மீட்டர் தொலைவுக்கு கழிவு நீர் அமைக்கப்படவில்லை பள்ளி வளாகத்தை ஒட்டி தனியா தேயிலை தோட்ட அமைந்துள்ளது. கிரிதரன் வீடு முதல் பள்ளிக்கூடம் சுடுகாடு வரைக்கும் 100 மீட்டர் தொலைவிற்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது கழிவுநீர் கால்வாய் இல்லாததால் பள்ளி வளாகத்தையொட்டி சாக்கடை நீர் பெருக்கெடுப்பதால் மாணவர்கள் நடந்து செல்ல சிரமமாக இருப்பதோடு துர்நாற்றம் வீசி நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவு நீர் கால்வாய் அமைத்து பள்ளி வளாகத்தை சுகாதாரப் பகுதியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.