கிருஷ்ணகிரி,டிச.14- கிருஷ்ணகிரி மைய மாவட்டம் காவேரிப்பட்டினம் காந்திநகர் பகுதியில் இருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் 2-12-2024 ஆம் தேதி கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜனநாயக உரிமையான வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை திரும்ப ஒப்படைக்கும் போராட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளராக இருக்கும் பொ.சசிகுமார் அந்த மக்களை போராட்டத்திற்கு கலந்து கொள்ள கூடாதுஉங்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்வார்கள் என்று சொல்லி அந்த மக்களை மிரட்டி போராட்டத்தின் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும், கட்சி நடத்தும் கூட்டங்களிலும் போராட்டங்களையும் கலந்து கொள்ளாமல் இருப்பதால், கட்சிக்கு கலங்கும் ஏற்படுத்தி வருவதால், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் பொ.சசிகுமார் என்பவரை ஆறு மாத காலத்திற்கு கட்சியின் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். இவருடன் கட்சியினர் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என கிருஷ்ணகிரி மைய மாவட்ட செயலாளர் அ.மாதேஷ் அறிக்கை விடுத்துள்ளார்.



