கோவை அக்:06
கோவை மாவட்டம்
பட்டணம் திருக்குமரன் நகர், விஐபி நகர், சீனிவாசா நகர் செல்லும் பொது பாதையை தனி நபர் கடந்த 7 ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்தார்.
அந்த ஆக்கிரமிப்பினை சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி சூலூர் வட்டாட்சியர் திரு தனசேகர், சூலூர் வருவாய் ஆய்வாளர் திரு. கங்காராஜ், பட்டணம் கிராம நிர்வாக அலுவலர் திருமதி. லோகநாயகி ஆகியோர் முன்னிலையில் வருவாய் துறையினரால் ஆக்கிரமிப்பு அகற்றப் பட்டது.
இந்நிகழ்விற்கு சூலூர் காவல் ஆய்வாளர் திரு. மாதையன் தலைமையில் 40க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.
ஆக்கிரமிப்பை அகற்ற உதவிய வருவாய் துறையினர், காவல் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் அனைவருக்கும் மூன்று நகர் மக்களும் மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்தனர்.



