மதுரை, தமிழர் திருநாள் தைத்திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக மந்தை அம்மன் கோவிலில் கிராம கமிட்டி, மாநகராட்சி மற்றும் வருவாய் அலுவலர்கள் சார்பாக சாமி கும்பிட்டு வாடிவாசலில் பூஜை நடைபெற்று பின் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் பிடி பழனி வேல் தியாகராஜன்
தலைமையில் உறுதிமொழி ஏற்ற பிறகு ஜல்லிக்கட்டு தொடங்கியது.
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையர், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காலை ஏழு மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மாலை ஆறு மணிக்கு நிறைவுற்றது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான பரிசு பொருட்களை மதுரை மேலூர் வருவாய் கோட்டாட்சியர் கார்த்தியாயினி தலைமையில் மதுரை தெற்கு தாசில்தார் ராஜபாண்டி, விஏஓ சிவராமன் உள்ளிட்ட அதிகாரிகள் அவனியாபுரம் அருகே உள்ள பி எம் எஸ் பள்ளியில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் காளைகளுக்கு பரிசு பொருட்களை சேகரித்து வந்தனர். அதில் சில்வர் குடம், ரேஞ்சர் சைக்கிள், இண்டக்க்ஷன் ஸ்டவ், கட்டில், மெத்தை , பீரோ, டேபிள் பேன், மிக்ஸி, அயன் பாக்ஸ், பிரஷர் குக்கர், தங்கம் மற்றும் வெள்ளி காயின், கார், டிராக்டர் என்று பல பரிசு பொருட்களை அறிவித்தனர். இதில் மதுரை விளாங்குடி சொக்க நாதபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய நவீன் என்ற மாடுபிடி வீரரை காளை முட்டியதில் மார்பில் காயம் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மதுரை முத்துக்காளை, ரவி மணிமாறன் பிரதர்ஸ்-ன் காளையை அடக்கினால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டது உடனே காளையை பாய்ந்து பிடித்து அடக்கிய ரஞ்சித் என்ற வீரருக்கு களத்திலேயே ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். இந்த நிலையில் பரிசு பெற்ற ரஞ்சித் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 55, மாடுபிடி வீரர்கள் 28 பேர்கள், மாட்டின் உரிமையாளர்கள் 8 பேர்கள், பார்வையாளர்கள் 17 பேர்கள் ஆகும்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 19 காளைகளை அடக்கிய திருப்பரங்குன்றம் கார்த்திக் முதல் இடம் பிடித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ரூ.8.50 லட்சம் மதிப்புடைய நிசான் நிறுவனத்தின் ‘மேக்னட்’ கார் மற்றும் கன்றுடன் கறவை மாடு பரிசாக பெற்றார். குன்னத்தூரை சேர்ந்த திவாகர் 15 காளைகளை அடக்கிய இரண்டாம் இடத்தைப் பிடித்து மோட்டார் பைக் பரிசாக பெற்றார்.
மேலும் சிறந்த காளையாக முதலிடம் பெற்ற மலையாண்டியின் காளைக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சார்பில் டிராக்டர் மற்றும் கன்றுடன் கறவை மாடு பரிசாக பெற்றார்.
டாக்டர் ஜிஆர் கார்த்திக் வேலுவின் காளைக்கு இரண்டாவது பரிசாக மோட்டார் பைக் பரிசாக பெற்றார். இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெவ்வேறு மாநிலம் மற்றும் மற்ற மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டுள்ளனர். இந்த
ஜல்லிக்கட்டுக்கு காவல் துறை சார்பாக ஆயிரம் காவலர்களுக்கு மேல் பணியில் அமர்த்தப்பட்டனர். தீயணைப்பு துறை மற்றும் அரசு இராசாசி மருத்துவமனை சார்பாக முதலுதவிக்காக ஆங்காங்கே பணியில் ஈடுபட்டனர்.