கோவை செப்:27
கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பில் 5ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு பேரணி மகளிர் பாலிடெக்னிக் பகுதியில் துவங்கி ஆர்.கே. ரங்கம்மாள் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
பேரணியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கொடியசைத்து துவக்கி வைத்தார். நிறுவன்த் தலைவர் ராஜ்குமார் , பொது செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச துணை தலைவர் லீமா ரோஸ் மார்ட்டின், தேசிய தலைவி மீனா ஜெயக்குமார், மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பேரணி குறித்து நிர்வாகிகள் கூறுகையில்
பொதுமக்களுக்கு உடல் உறுப்புகள் தானம் போதிய விழிப்புணர்வு இல்லை இறந்த பின்பு மண்ணோடு மண்ணாக போகும் இந்த உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நாம் இந்த மண்ணில் தொடர்ந்து வாழலாம். நம்மால் மற்ற உயிர்களை வாழவைக்கவும் முடியும் என்ற விழிப்புணர்வு நம் மக்களுக்கு ஏற்படுத்தவே 5 ஆண்டுகளாக நாங்கள் பேரணியை நடத்துகிறோம் . மேலும் இது வரையில் இல்லாத அளவிற்கு 550 கும் மேற்பட்டோர் உடற் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இது உலகளவில் கின்னஸ் ரெக்கார்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக
மக்கள் நீதி அரசர் சர்வதேச தலைவர் tn வள்ளி விநாயகம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் விழா குழுவினர் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.