கருங்கல் நவ 17
கருங்கல் பாலூர் ரோட்டில் ஆரோன் மருத்துவமனை அருகில் லூயிஸ் & லூயிஸ் நிறுவனம் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தில் புதிதாக பர்னிச்சர் ஷோரூம் நேற்று திறக்கப்பட்டது. இதனை ராஜேஷ் குமார் எம் எல் ஏ திறந்து வைத்தார். முளகுமூடு வட்டார முதல்வர் அருட்தந்தை டேவிட் மைக்கேல் ஆசீர்வதித்தார். தாரகை கட்பட் எம் எல் ஏ ஆகியோர் முதல் விற்பனையை துவங்கி வைத்தார்கள் . பிரின்ஸ் எம் எல் ஏ, பூஜிதகுரு பால பிரஜாதிபதி அடிகளார், அப்துல் ரஷீது அலிம் ஹசானி வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் பாலூர் பஞ்சாயத்து தலைவர் அஜித்குமார், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜ் மறவன்குடியிருப்பு கவுன்சிலர் விஜயன் கன்னியாகுமரி மாவட்ட அரசு போக்குவரத்து துணை மேலாளர் வணிகம் ஜெரோலின் லிஸ்பன் சிங் , கருங்கல் ஜார்ஜ் மற்றும் கருங்கல் வியாபாரிகள் நலச்சங்க உறுப்பினர்கள் கட்டிட ஒப்பந்தக்காரர்கள், நண்பர்கள், உறுப்பினர்கள் மேலும் பல வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகைதந்தவர்களை லூயிஸ் லூயிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லூயிஸ் சகாயம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.