கன்னியாகுமரி ஜுலை 30
குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த இரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னமாள் ஆலய திருவிழாவின் நிறைவு நாள் விழாவை முன்னிட்டு இரஜகை நண்பர்கள் சார்பில் இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக நாட்டியமாடிய கவிதாஸ் நாட்டியசாலா பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பங்குத்தந்தை கிறிஸ்டியான் மாணவிகளை ஆசீர்வதித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் பங்கு பேரவை துணைத் தலைவர் ஏ.பி.எம்.ஜெபர்சன்,
கவிதாஸ் நாட்டியசாலா நிறுவனர் டாக்டர் விண்ணரசி கெபின் என்ற கவிதா மற்றும் இரஜகை நண்பர்கள் குழுவைச் சேர்ந்த தொழிலதிபர் ஜோசப்டென்சிங், மெரிட் கிங்ஸ்லி, அருள்சகாயரீகன், பிரபு, லெனின், செல்வசுரேஷ், பெலிக்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.