தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில்,
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வரின் பொற்கால ஆட்சியில் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களாலும் உற்சாகமாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையில் எல்லோரும் வாழ்க்கையும் செழிக்க வேண்டும் எனவும், பொங்கல் அன்று, எல்லா இல்லங்களிலும் சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வேண்டும் எனவும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் எனவும், சாதி, மத, இன வேறுபாடு எதுவுமின்றி, உழைப்பைத் தந்து உதவியவர்களையும் எண்ணி உழவர் பெருமக்களுக்கும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும்,
நன்றி தெரிவித்து வணங்கி மகிழும் இனிய திருவிழாவாக, மனித நேயம் வளர்க்கும் தமிழ்ச் சமுதாயத்தின் தலைசிறந்த பண்பாட்டினை உலகுக்கு உணர்த்திடும் மகத்தான திருவிழாவாக தைப் பொங்கல் விழாவை சிறப்பிக்க வேண்டும் எனவும்,இந்த பொங்கல் திருநாளை ஜாதி, மதம் கடந்து சமத்துவத்தை பேணி தமிழர் திருநாளை ஒற்றுமையாக கொண்டாட வேண்டும் எனவும், அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.