சங்கரன்கோவில் அம்பேத்கர் நகர் நியாய விலை கடை ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
சங்கரன்கோவில் நகராட்சி 19 வார்டு அம்பேத்கர் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலை கடை திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து புதிய நியாய விலை கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.இதில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன், மாவட்ட பொருளாளர் சரவணன்,சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா, நகர அவை தலைவர் முப்பிடாதி, நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய் நகர பொருளாளர் லாசர் சதாசிவம், நகராட்சி கவுன்சிலர் ராமு ராமர்,
மற்றும் விக்னேஷ்,ஜெயக்குமார், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.